வெள்ளி, ஜனவரி 20, 2017

முதல் முறையாய் ஒரு போராட்டம்

{2017 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி;
தமிழகம் முழுவதும் "ஏறு தழுவுதல்" சார்ந்து நடந்த போராட்டக் காட்சிகள்}

நானறிந்த வகையில்...
  1. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மனதுக்கு எந்த நெருடலையும் அளிக்காமல்; சரியாய்/முறையாய் நடத்தப்படுகிறது.
  2. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மக்களுக்காக, மக்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
  3. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியலை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  4. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  5. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எல்லா அரசியல் கட்சிகளையும் விலக்கி வைத்து - மக்களால் நடத்தப்படுகிறது.
  6. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மாணவர்களால்/இளைஞர்களால்/பொதுமக்களால்; எவ்விதமான அரசியல் சார்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
  7. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்தப் பிரிவினையும் இல்லாமல்" - ஒட்டுமொத்த இனத்திற்காய்; ஒட்டுமொத்த இனத்தால் - நடத்தப்படுகிறது.
  8. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எந்த சுயஇலாபமோ/சுயநலமோ இல்லாமல் நடத்தப்படுகிறது.
  9. "மிக முக்கியமாய்"... முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்த தலைமையும் இல்லாமல்/எந்த தலைமையையும் எதிர்பார்க்காமல்" எல்லோரையும் முதன்மைப்படுத்தி நடத்தப்படுகிறது.
  10. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும்!" என்ற நம்பிக்கைப் பெருக்கி இருக்கிறது.
என் சார்பிலும் நடக்கும் இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டு கலாச்சாரம் காக்கப் போராடும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் மதித்து, என் தலை வணங்குகிறேன்.

தொடரட்டும்! வளரட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக