வியாழன், ஜனவரி 05, 2017

குறள் எண்: 0522 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0522}

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்

விழியப்பன் விளக்கம்: குறையாத அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைத்தால்; அது, குறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.
(அது போல்...)
மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்திற்கு கிடைத்தால்; அக்குடும்பம், குறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக