செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

பசும்புல் தலைகாண்பு (குறள் எண்: 0016)



           "விசும்பின் துளிவீழின்" என்று துவங்கும் குறள் எண் 0016-இல் "பசும்புல் தலைகாண்பு" என்ற சொற்றொடரில் வரும் "தலை" என்ற சொல்லிற்கு பசும்புல்லின் தலை/பசும்புல்லின் நுனி/பசும்புல்லின் தோற்றம் என்பது போன்றே எல்லோரும் பொருள் படுத்தி இருக்கின்றனர். எனக்கென்னவோ, இவற்றை எல்லாம் விட வேறேதேனும், இன்னும் கருத்து செறிந்த பொருள் இருக்கக்கூடும் என்று தோன்றியது. மேற்குறிப்பிட்டவை அல்லாமல், வேறேதேனும் ஒரு தனித்த/அழுத்தமான காரணம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

       தொடர்ந்து யோசித்ததில், நம் பெருந்தகை "தலை" என்ற சொல்லை "முளைத்தல்" என்ற பொருளிலேயே எழுதி இருப்பார் என்றி தோன்றியது. ஆம் "பசும்புல் முளைப்பதை"க் கூட பார்க்க முடியாது என்று சொல்லும்போது, மழையின் அவசியத்தை அவர் எத்தனை ஆழமாய் சொல்ல வருகிறார் என்பதை உணர முடிகிறது. எனவே, என்னுடைய விளக்கவுரையில் "ஒரு பச்சைப்புல் முளைப்பதைக் கூட பார்த்தல் இயலாது" என்றே கூறியிருக்கிறேன். நம் பொதுமறையில் மேலோட்டமாய் பார்க்கும்போது பல சொற்கள் மிகச் சாதாரணமாய் தோன்றும். ஆனால்...

அவற்றை ஆழ ஆராய முனைந்தால், பற்பல பொருள்-குவியல்கள் கிடைக்கும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக