புதன், ஆகஸ்ட் 05, 2015

குறள் எண்: 0003 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0003}


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் 

விழியப்பன் விளக்கம்: மலரின்-மீதே நடந்தவனின் (கடவுளின்) மாட்சிமையான பாதங்களை அடைந்தோர்; இப்புவியில் "சாகா வரம்" பெற்று நீடித்து வாழ்வர்.

(அது போல்...)

உண்மையின்-மீதே பயணித்தவரின் உன்னதமான வழிகாட்டுதலைப் பெற்றோர்; செயல்களில் "தோல்வியில்லா வரம்" பெற்று வெற்றிவாகை சூடுவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக