புதன், ஆகஸ்ட் 26, 2015

குறள் எண்: 0024 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0024}  

                       
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விழியப்பன் விளக்கம்: மனவலிமை எனும் அங்குசத்தால் "யானை-போன்ற" ஐம்புலன்களை அடக்குபவரே; துறவறமெனும் நிலத்திற்கு உயிர்ப்புள்ள விதையாவர்.

(அது போல்...)

ஒழுக்கம் எனும் கேடயத்தால் "இமயம்-போன்ற" ஐந்துகுணங்களை காப்பவரே; இல்லறமெனும் விவசாயத்திற்கு தரம்வாய்ந்த உரமாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக