சனி, ஆகஸ்ட் 22, 2015

குறள் எண்: 0020 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0020}
                             

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

விழியப்பன் விளக்கம்: நீரில்லாமல் உலகின் வாழ்வியல் கோளாறடையும் என்பதால்; மழை இல்லாமல், எப்படிப்பட்டவருக்கும்  ஒழுக்கம் தவறும்!

(அது போல்...)

தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின் அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக