சனி, ஆகஸ்ட் 29, 2015

குறள் எண்: 0027 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0027}
                        

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு

விழியப்பன் விளக்கம்: சுவை, ஒளி, தொடுதல், ஒலி மற்றும் மணம் - இவை ஐந்தையும்; ஆராய்ந்து தெளிந்தருக்கு, இவ்வுலகம் எளிதில் வசப்படும்.

(அது போல்...)

அன்பு, பண்பு, உறவு, அறம், மற்றும் நட்பு - இவை ஐந்தையும்; ஆழ்ந்துணர்ந்த அன்னைக்கு, குடும்பம் முழுதாய் கட்டுப்படும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக