திங்கள், ஆகஸ்ட் 31, 2015

குறள் எண்: 0029 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0029}
                          

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது

விழியப்பன் விளக்கம்: குணமெனும் குன்றின் உச்சியில் ஏறி நின்றவரின் கோபம்; ஒரு கணம் கூட நிலைத்திருத்தல் அரிதானது.

(அது போல்...)

மதமெனும் யானையின் கழுத்தில் ஏறி, சம்மணமிட்டு அமர்ந்திருப்பவரின் சாதிய-உணர்வு; ஒரு கணம் கூட வெளிப்படுதல் அரிது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக