வியாழன், ஆகஸ்ட் 20, 2015

குறள் எண்: 0018 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0018}
                           

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விழியப்பன் விளக்கம்: வானம்(மழை) வறண்டு போனால்; வானுலகத்தில் உள்ளவர்களுக்காக செய்யப்படும் விழாக்களும்/வழிபாடுகளும் நின்றுபோகும்.

(அது போல்...)

மனிதன்(வயிறு) பசியில் வாடினால்; குடும்பத்தில் இருப்போர்க்காக திட்டமிட்ட பயணங்களும்/பொழுதுபோக்குகளும் வலுவிழக்கும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக