வியாழன், பிப்ரவரி 02, 2017

குறள் எண்: 0550 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0550}

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோரால், கொடியோருக்கு அளிக்கப்படும் கொடூர-தண்டனைகள்; சுற்றியிருக்கும் இளம்பயிரைக் காப்பாற்ற, களையைப் பிடுங்குவதற்கு நிகராகும்.
(அது போல்...)
பெற்றோர்களால், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கடின-அறிவுரைகள்; ஒளிந்திருக்கும் பிரகாசத்தை வெளிக்கொணர, தங்கத்தைச் சுடுவதற்கு ஒப்பாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக