சனி, பிப்ரவரி 18, 2017

குறள் எண்: 0566 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0566}

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

விழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர் இருப்பின்; மக்களின் மலையளவு செல்வம், வளர்ச்சி இல்லாமல் விரைவாய் அழியும்.
(அது போல்...)
தீய செயல்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர் இருப்பின்; இளைஞர்களின் கடலளவு சக்தி, பயன் இல்லாமல் வேகமாய் கெடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக