சனி, பிப்ரவரி 11, 2017

குறள் எண்: 0559 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0559}

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; பருவமழையும் தவறி, வானம் பொழியாமல் போகும்.
(அது போல்...)
சமுதாயம், அறம் தவறி வாழப் பழகினால்;  அடிப்படையும் தவறி, மக்களாட்சி நிலைக்காமல் போகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக