புதன், பிப்ரவரி 08, 2017

குறள் எண்: 0556 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0556}

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

விழியப்பன் விளக்கம்: செங்கோலைக் காப்பதே, அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத் தரும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.
(அது போல்...)
பாதுகாப்பை உயர்த்துவது, வல்லரசுக்கு நீடித்த பலத்தை அளிக்கும்; மாறாய் பாதுகாப்பு மோசமடைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக