திங்கள், பிப்ரவரி 20, 2017

குறள் எண்: 0568 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0568}

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு

விழியப்பன் விளக்கம்: அரசாங்க அங்கத்தினரான அமைச்சர்களைப் பின்பற்றாமல், சினத்தைப் பின்பற்றி அரசாள்பவர் வெகுண்டெழுந்தால்; அரசாங்கத்தின் செல்வம் அழியும்.
(அது போல்...)
தலைமுறையின் நரம்புகளான உறவினர்களைப் பேணாமல், வெறுப்பைப் பேணிக் குடும்பத்தினர் பகைகொண்டால்; தலைமுறையின் வளர்ச்சி குறையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக