திங்கள், பிப்ரவரி 06, 2017

குறள் எண்: 0554 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0554}

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், செங்கோல் தவறிக் கொடுங்கோலைச் செய்யும் அரசாங்கம்; உணவையும் குடிமக்களையும், ஒரே நேரத்தில் இழக்கும்.
(அது போல்...)
உணராமல், பொறுமை இழந்து உறவுகளை நீக்கும் பரம்பரை; கலாச்சாரத்தையும் சந்ததியையும், ஒரே தலைமுறையில் இழக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக