திங்கள், பிப்ரவரி 13, 2017

குறள் எண்: 0561 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0561}

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராகத் தண்டிப்பவரே அரசாள்பவர்.
(அது போல்...)
தாய்மையோடு அணுகி, பிழைகளைக் கண்டறிந்து; அதுபோன்ற பிழைகள் மீண்டும் நேராத  வகையில், பிழைகளைக் களைய உதவுவோரே ஆசிரியர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக