ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

குறள் எண்: 0553 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0553}

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், ஒவ்வொரு நாளையும் ஆராய்ந்து; முறையான செங்கோலைச் செலுத்தவில்லை எனில், அவர்களின் நாடு ஒவ்வொரு நாளும் வாழ்வியலை இழக்கும்.
(அது போல்...)
சமுதாயம், ஒவ்வொரு நிலத்தையும் போற்றி; இயற்கையான விவசாயத்தை செய்யவில்லை எனில்,   அதன் சந்ததி ஒவ்வொரு பாரம்பரியத்தையும் வழக்கத்திலிருந்து இழக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக