ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

குறள் எண்: 0560 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0560}

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

விழியப்பன் விளக்கம்: காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்; பசுவின் பயனான பால்வளம் குறையும்! இறைப்பணியைத் தொழிலாய் கொண்டோர், மறைநூல்களை மறப்பர்!
(அது போல்...)
கற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; கல்வியின் பயனான சிந்தனை சிதறும்! மனிதத்தை அடிப்படையாய் கொண்டோர், மதத்தை விரும்புவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக