செவ்வாய், பிப்ரவரி 28, 2017

குறள் எண்: 0576 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0576}

மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர்

விழியப்பன் விளக்கம்: கண்ணின் இயல்பை அறிந்து, மனிதமெனும் கருணையக் காட்டாதோர்; மண்ணின் இயல்பை ஒத்து வளராத, மரத்திற்கு இணையாவர்.
(அது போல்...)
தலைமுறையின் கடைமையை உணர்ந்து, உறவெனும் சந்ததியோடு வாழாதோர்; பிறப்பின் கடமையை உணர்ந்து வளராத, விலங்குக்கு சமமாவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக