வியாழன், பிப்ரவரி 09, 2017

குறள் எண்: 0557 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0557}

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: மன்னனின் செங்கோல் சிறக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்; மழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போன்றதாகும்.
(அது போல்...)
பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி இல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போன்றதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக