வெள்ளி, பிப்ரவரி 24, 2017

குறள் எண்: 0572 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0572}

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

விழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையத் தழுவி, இயங்குகிறது இவ்வுலக வாழ்வியல்; அந்த கருணை இல்லாமல் இருப்போர், பூமிக்கு தேவையற்ற சுமையாவர்.
(அது போல்...)
பரம்பரையெனும் உறவைத் தழுவி, அமைகிறது இக்குமுகாய அடிப்படை; அந்த உறவைத் தகர்த்து வாழ்வோர், தலைமுறைக்கு தேவையற்ற இடைவெளியாவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக