ஞாயிறு, பிப்ரவரி 19, 2017

குறள் எண்: 0567 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0567}

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

விழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்; அரசாள்பவரின் வெற்றியை உடைத்துத் தகர்க்கும், அறுக்கும் கருவிகளாகும்.
(அது போல்...)
அறமற்ற சிந்தனைகளும், இரக்கமற்ற செயல்களும்; மனிதகுலத்தின் அடிப்படையை சிதைத்து அழிக்கும், கொடிய விஷங்களாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக