வெள்ளி, பிப்ரவரி 10, 2017

குறள் எண்: 0558 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0558}

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்

விழியப்பன் விளக்கம்: முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்; வறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே அதீத துன்பமாகும்.
(அது போல்...)
உண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் பார்வையில்; பொய்யராய் இருப்பதை விட, நேர்மையுடன் வாழ்வதே அதிக சிக்கலாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக