திங்கள், பிப்ரவரி 27, 2017

குறள் எண்: 0575 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0575}

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும்

விழியப்பன் விளக்கம்: கண்களை அலங்கரிக்கும் உண்மையான அணிகலன், மனிதமெனும் கருணையே! அக்கருணை இல்லையெனில், கண்கள் புண்ணென்றே உணரப்படும்.
(அது போல்...)
பிள்ளைகளை சான்றோராக்கும் சிறந்த காரணிகள், படைத்தவரெனும் பெற்றோரே! அப்பெற்றோர் இல்லையெனில், பிள்ளைகள் பாதையற்றோராக உணரப்படுவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக