புதன், ஆகஸ்ட் 03, 2016

குறள் எண்: 0367 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0367}

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த வினைகளை, முழுவதும் அறுத்துவிட்டால்; ஒருவர் விரும்பும் வண்ணம் , கெடுதலற்ற வினைகளுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
தீவிரவாதம் விதைக்கும் வெறிகளை, முழுமையாய் வேரறுத்துவிட்டால்; மக்கள் விரும்புவது போல், அச்சமற்ற சமுதாயத்திற்கு வித்திடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக