வியாழன், ஆகஸ்ட் 18, 2016

குறள் எண்: 0382 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0382}

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

விழியப்பன் விளக்கம்: வீரம்/இரக்கம்/பகுத்தறிவு/வைராக்கியம் - இவை நான்கும்; எந்த சூழலிலும் குறையாமல் இருப்பதே, அரசருக்கு இயல்பாகும்.
(அது போல்...)
மண்வளம்/நீர்வளம்/தரமான-விதை/தழைச்சத்து - இவை நான்கும்; எந்த வகையிலும் சிதையாமல் காப்பதே, விவசாயத்தின் அடிப்படையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக