செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

குறள் எண்: 0387 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0387}

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: கனிவான பேச்சுடன், வேண்டியதைக் கொடுக்கும் திறனுடைய ஆட்சியாளருக்கு;  அவர்கள் புகழ்காத்து, அவர்கள் விரும்பிய வண்ணம் - இவ்வுலகம் அமையும்.
(அது போல்...)
பொதுநல நோக்குடன், ஊழலை ஒழிக்கும் திண்ணமுடைய தலைவருக்கு; அவர்கள் வெற்றிபெற, அவர்களுக்கு துணையாய் இருந்து - மக்கள் உதவுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக