ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

குறள் எண்: 0378 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0378}

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

விழியப்பன் விளக்கம்: நிச்சயமான ஊழ்வினைத் துன்பங்கள், வருத்தாமல் தவறுமாயின்; பொருளற்ற வறியவர்கள், துறவறம் மேற்கொள்வர்.
(அது போல்...)
தீர்க்கமான சட்டத்தின் தண்டனைகள், வழங்கப்படாமல் இருக்குமாயின், அறமற்ற மனிதர்கள், தீவிரவாதம் செய்திடுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக