வியாழன், ஆகஸ்ட் 25, 2016

புதிதாய் பிறந்தேன்...


கடலளவில் மது
குளத்தளவில் புகை
குடத்தளவில் மாது
குவளையளவில் "கஞ்சா"வென...

என்நிலை மறக்கடிக்கும் சிற்றின்பம்
சேர் செய்கைகள் எண்ணவியலா!
என்நிலை சிறப்பிக்கும் பேரின்பம்
சேர் செய்கைகள் விரலே-எண்ணும்!

44-அகவையில் பாதி சிற்றின்பத்தில்
மீதமிருப்பது நான்கோ? ஐந்தோ?
இருப்பதில் மிகுதியை; பேரின்பம்
சேர்ப்பதில் தகுதியை வளர்க்க...

கல்லறைக்கு முன்-மீண்டும்
கருவறைக்குள் புகுந்திடாமல்
பிறந்தேன்நானும் புதிதாய்!
பதிவேன்நாளை என்பெயரை;

பிரபஞ்சம் இல்லையெனினும்
“பிறந்தமண்” வரலாற்றில்!
பெருந்தகையின் பேரருளுடன்
“பிறவிப்பெருங்கடல்” நீந்திடுவேன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக