செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

குறள் எண்: 0380 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0380}

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

விழியப்பன் விளக்கம்: ஊழைவிட பேர்வலிமை கொண்டவை எவையுள்ளன? எதுவொன்றை மாற்றாய் நினைத்திடினும்; ஊழே எல்லாவற்றையும் கடந்த முதன்மையாய் இருக்கும்.
(அது போல்...)
அஹிம்சையைவிட பேராற்றல் கொண்ட ஆயுதமெது? எதுவொன்றை ஆயுதமாய் கையாண்டிடினும்; அஹிம்சையை அனைத்தையும் விட வலிமையாய் எஞ்சும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக