வியாழன், ஆகஸ்ட் 25, 2016

குறள் எண்: 0389 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0389}

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

விழியப்பன் விளக்கம்: செவிமடுக்க முடியாத விமர்சன சொற்களையும், பொறுத்தருளும் பண்புடைய; அரசனின் அருட்குடையின் நிழலில், உலகம் அமைதியாய் தங்கும.
(அது போல்...)
அறமற்ற வகையில் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும், அரவணைக்கும் குணமுடைய; ஆள்பவரின் உன்னதமான சேவையில், மக்கள் பயமின்றி வாழ்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக