புதன், ஆகஸ்ட் 24, 2016

குறள் எண்: 0388 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0388}

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: அறச்செயல்களை வகுத்து, மக்களைப் பாதுகாக்கும் அரசாள்வோர்; மக்கள் மனதில், இறைவனுக்கு நிகராய் உணரப்படுவர்.
(அது போல்...)
சூழல்களை உணர்ந்து, குடும்பத்தை வாழ்விக்கும் பிள்ளை; உடன்பிறந்தோர் மனதில், பெற்றோருக்கு நிகராய் மதிக்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக