ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

திருமணமும் - "திருட்டு"மனமும்...…

{இன்று காலை "கோவல் நண்பர்கள்" வாட்ஸ்ஆப் குழு உரையாடல் ஒன்று; 
என் மனதில்  ஆழ்ந்திருந்த இதை வெளிக்கொணர்ந்தது!}


"கண்டிப்பா எல்லோரும் வந்துடுங்கடா!"
பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில்
“நண்பன் விக்கிரமனும்” அன்புஅழைப்பு
விடுத்தான் - சகோதரிதிரு மணவிழாவுக்கு

நண்பர்கள் நாங்களும் குதூகலமாய்
“பெங்களூர்” சேர்ந்துதங் கும்விடுதியும்
அடைந்தோம்! உடல்மகிழ குளித்துவிட்டு
மனம்மகிழ ஊரும்சுற்றி விடுதியும்திரும்பி

பயணத்துக்கு பணம்தந்து தங்கிஉறங்கிட
விடுதியும்தந்த விக்கிரமனிடமே மதுவருந்த
காசும்கேட்டோம்! எப்படிதிரட் டினான்என்றே
இதுவரைஎச் சிந்தனையில்லை! குடிப்பதே

"கடமை"யென சிந்தனைமழுங்கி மதுக்கடை
நுழைந்துமது வையும்"சைட் டிஷ்ஷையும்"
வயிறுநிரப்பி தொண்டைவரை நிரப்பினோம்!
இருந்திட்ட காசும்"தண்ணி" யாய்கரையவே

வழியேயின்றி விடுதிசேர்ந்து தூங்கினோம்!
தூங்கியேபோ னோம்முகூர்த்த மதனையும்
காணாமலேயும்! இருந்தும்வெட் கமேதுமின்றி
"உணவெனும் அபத்தத்தை" திண்ணவேண்டி

தூக்கமும்களை த்துமணமண்ட பம்சேர்ந்து
வயிறுமுட்ட உண்டோம்! நல்லவேளை
மதுக்கடை காலையில்திறக் கப்படவில்லை!
இல்லையேல் சிற்றுண்டிக்காக வும்மண்டபம்

சென்றிருக்க மாட்டோம்; அடேவிக்கிரமா!
அன்றன்றியும் என்றேனும்நீ இப்பாவிகளை
உணர்ந்துவருந் தினாயோஇல் லையோநீயே
அறிவாய்!மது விளைவுகுறித்த சிந்தனைவரும்

போதெல்லாம் நான்இதனை மறப்பதில்லை!
குடித்தமதுவும் திண்ண"சைட் டிஷ்ஷும்"அன்றே
"ஒன்றாய்இரண் டாய்வெளிக்கு போயேபோனது!
என்மனம்மழு ங்கியநினைவு இன்னும்உள்ளேயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக