சனி, ஆகஸ்ட் 27, 2016

இறந்து(ம்) தூரெடுப்பவன் (நா. முத்துக்குமார்)...


படிக்கக்கூட இல்லை;கேட்ட
பொழுதப்போதே என்னுள்ளும்
தூரெடுத்தது - கணையாழியில்
நீ(யெழு/யெடுத்)திட்ட "தூர்"!

அற்பஆசைகளில் புதைந்து;
பின்னர்பின்னர் என்றெனவே
என்எண்ணக் கிணற்றில்
புதை(ந்/த்)த சிந்தனைகளை,

கவிதைகளாக ஊற்றெடுக்க;
முனைப்பை "வேராய்"ஆக்கி
அற்பங்கள் ஒவ்வொன்றையும்
"தூராய்"அகற்ற லானேன்!

அதிசயமதை எப்படிவிவரிக்க?
புதைந்திட்ட ஊற்றகற்றிடவும்;
விளைந்தது புதுஊற்றுகளுமே!
வாழ்ந்திடுவாய் "முத்துக்குமார்!"

உன்னுருவு மறைந்தாலும்;
உன்னுயிர் மறையாமல்;
என்னவர் போன்றோரால்
எஞ்ஞான்றும் காக்கப்படுவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக