வியாழன், ஆகஸ்ட் 04, 2016

குறள் எண்: 0368 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0368}

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

விழியப்பன் விளக்கம்: ஆசை இல்லாதோர்க்கு, துன்பம் இல்லாமல் ஆகும்; ஆசை இருந்தால், கெடுதல்கள் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.
(அது போல்...)
பிடிவாதம் இல்லாதோர்க்கு, குழப்பம் இல்லாமல் ஆகும்; பிடிவாதம் இருப்பின், குழப்பங்கள் தவறாமல் வறுத்திக் கொண்டிருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக