செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

குறள் எண்: 0394 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0394}

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

விழியப்பன் விளக்கம்: ஒன்றுகூடி, பகுத்தறிவு விரிவடைய மகிழ்ந்து; பின் மனது வருந்தப் பிரிவதே, மொழியில் புலமடைந்த புலவர்களின் இயல்பாகும்.  
(அது போல்...)
உறவாடி, உடல் அயர்ச்சிக்க ஆர்ப்பரித்து; பின் உள்ளம் உருக விலகுவதே, சுபநிகழ்ச்சிகளில் இணையும் உறவுகளின் தன்மையாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக