வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

குறள் எண்: 0390 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0390}

கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

விழியப்பன் விளக்கம்: வேண்டியவருக்கு கொடுத்தல்/கனிவுடன் பேசுதல்/அறம் கடைப்பிடித்தல்/மக்களைப் பாதுகாத்தல் - இந்நான்கு நல்லொழுக்கம் உடைய அரசனேமற்ற மன்னர்களுக்கு கலங்ககரை விளக்காவான்.
(அது போல்...)
முறையாய் பகிர்தல்/எதிர்பார்ப்பற்ற தியாகம்/முதியோரை மதித்தல்/உறவுகளைப் பேணுதல் - இந்நான்கு அறங்களை உடைய உறுப்பினரேமற்ற உறுப்பினர்களுக்கு குடும்பத் தலைவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக