திங்கள், ஆகஸ்ட் 22, 2016

குறள் எண்: 0386 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0386}

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர் - பார்ப்பதற்கு எளிமையாய், பிறர்மனம் புண்பட பேசாதவனாய் இருப்பின்; அவர்கள் ஆளும் நாடு, உயர்வாய் புகழப்படும்.
(அது போல்...)
படைப்பாளி - பழகுவதற்கு எளிதாய், விமர்சிப்போரை விமர்சிக்காத நேர்மையுடன் இருப்பின்; அவர்கள் படைக்கும் படைப்புகள், அறமுடன் பயணப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக