ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

குறள் எண்: 0392 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0392}

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: எண்களை அடிப்படையாகக் கொண்ட, கணிதம் போன்ற கல்வி; எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட, மற்ற கல்வி - இவ்விரண்டும், உலக உயிர்கட்கு இரு கண்களாகும். 
(அது போல்...)
சிந்தனைகளை ஒட்டியத் தழுவிய, தேடல் போன்ற முனைப்பு; செயல்களை ஒட்டியத் தழுவிய, மற்ற முனைப்பு - இவையிரண்டும், பகுத்தறிய முயற்சிப்போர்க்கு இரு கைகளாகும்.

{என்குறிப்பு: "செய்முறையும் (Practical/Experiment), கோட்பாடும் (Theory)" சம அளவில் கலந்த படிப்பறிவுதான் சிறந்தது என்பதை; 2000 ஆண்டுகளுக்கு முன், நம் பெருந்தகை  எவ்வளவு எளிதாய் சொல்லி இருக்கிறார்?!}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக