செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

ஆண்-திமிர்


இளங்கலை இயற்பியல் பயின்றபோது,
1989-ஆண்டின் ஓர்நாள் காலையில்;
"கைலியில் இரத்தம்!" - பயந்துபோய்...
இராவண அண்ணனிடம் கேட்டேன்;
"ஒன்னுமில்லை போடா"வென அதட்டினார்!
பெருமாள் அண்ணனிடம் கேட்டேன்;
"தன்னியல்பு நையாண்டி"யுடன் சிரித்தார்!

உடன்பயின்ற நண்பர்களிடம் கேட்டேன்;
"பெரிய மனிதனானதாய்" கண்ணடித்தனர்!
"என்வெட்கம்" உணர்ந்த முதல்நாளது;
ஆணுக்கும் வெட்கமுண்டு! மஞ்சள்நீராட்டு(ம்)
காட்டாமல், "வெட்கப்படவே வெட்கப்பட"
அடக்கப்பட்டது ஆணினம்! அடக்கப்பட்ட
வெட்கம்தான் "ஆண்-திமிர்" ஆனதோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக