வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

இதில் எது சிறந்தது?


அகவை31-இலும் தந்தையின் தயவில்நான்
படித்துக் கொண்டிருக்க - என்வயதோர்
"வேலை/ தலைமுறைதொழில்/ வியாபாரம்"
என்றவொன்றால் பொருள் ஈட்டும்பணியில்!

ஊரும்/உறவும் பலவகையில் விமர்சிக்க
பெற்றோரும்உடன் பிறந்தோரும் ஆதரிக்க
படிப்பும் தொடர்ந்தது படிப்படியாயும்
முடிவில்நானும் முனைவனும் ஆனேன்!

என்வயதை ஒத்தோர்பலரும் விரைவாய்
"வீடுகட்டல் திருமணம் பிள்ளையென"
உயர்கையில் - நான்மட்டும் "முதல்"படியில்
எனக்கும்அவை நடந்தன - காலம்கடந்தே!

நிழலாய்இருந்த தந்தைக்கு நிழலானேன்
உந்திவிட்ட தமையன்-மக்களை உந்தினேன்
உரமிட்ட மருதமையன்-மக்கட்கு உரமானேன்
ஊக்கிவிட்ட வம்சத்தார்-மக்களை ஊக்கினேன்

என்வயதோர் பலர்விரைந்து வாழ்ந்து
(விரை/வாழ்)ந்தே ஓய்கையில்; நான்மட்டும்
"மெதுவாய்! இயல்பாய்!"இதில் எதுசிறந்தது?
"இறந்த/(பின்)வரும்" காலம் நிர்ணயிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக