வியாழன், செப்டம்பர் 01, 2016

குறள் எண்: 0396 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0396}

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

விழியப்பன் விளக்கம்: தோண்டும் அளவிற்கு நீரூற்றுப் பெறும், கிணறு போல்; ஒருவர் கற்கும் அளவுக்கேற்ப, பகுத்தறிவு விரிவடையும். 
(அது போல்...)
தேர்வானோர் திறனுக்கேற்ப வலிமையாகும், சட்டமன்றம் போல்; தனிநபரின் சுயவொழுக்கம் சார்ந்து, சமூகம் வளர்ச்சியடையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக