சனி, செப்டம்பர் 24, 2016

குறள் எண்: 0419 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கேள்வி; குறள் எண்: 0419}

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

விழியப்பன் விளக்கம்: ஆழ்ந்தறியும் கேள்வி ஞானம் இல்லாதவர்; பிறர் வணங்கும் வண்ணம், பண்பான சொற்களைப் பேசுபவராதால் அரிதானது.
(அது போல்...)
வியத்தகு உறவுப் புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான சந்ததிகளை உருவாக்குதல் கடினமானது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக