வெள்ளி, செப்டம்பர் 02, 2016

குறள் எண்: 0397 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0397}

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

விழியப்பன் விளக்கம்: “எந்த நாடும்/ஊரும், கற்றவர்களுக்கு, தன் சொந்த நாடும்/ஊரும் ஆகும்!” எனும்போது; தம் பிறப்பு அழியும்வரை, ஒருவர் கற்காமல் இருப்பதேன்?  
(அது போல்...)
“எந்த வீடும்/மக்களும், ஆட்சியாளருக்கு, தம் சொந்த வீடும்/மக்களும் ஆகும்!” எனும்போது; தம் பதவி முடியும்வரை, அரசியலார் பொதுநலன் காக்காததேன்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக