திங்கள், செப்டம்பர் 19, 2016

குறள் எண்: 0414 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0414}

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

விழியப்பன் விளக்கம்: கற்காதவர் ஆயினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; ஒருவர் தளர்வடையும் நேரத்தில, அது “ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.
(அது போல்...)
பொதுப்பணி செய்யாவிடினும், பணியாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; ஒருவரின் மரணப் படுக்கையில், அது  “உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக