ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

குறள் எண்: 0406 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0406}

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: கற்காதவர் உயிரோடிருப்பது, அவர்கள் “உயிரோடு” இருக்கிறார்கள் என்ற அளவீட்டைத் தவிர்த்து; பயன்படாத மண்ணைக் கொண்ட, வறண்ட நிலத்திற்கே ஒப்பாவர்.
(அது போல்...)
நேர்மையற்றோர் ஆட்சியிலிருப்பது, அவர்கள் “ஆட்சியில்” இருக்கிறார்கள் என்ற ஆதாரத்தைத் தவிர; பயனற்று பூத்துக் காய்க்கும், எட்டி மரத்திற்கே இணையாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக