வெள்ளி, செப்டம்பர் 09, 2016

தமிழால், தமிழுடன் ஓர் காதல்(கவிதை)!


முலைப்பால் தரும்வளர்ச்சியில்
முளைப்பால் மூன்றிலைஇட்டிடா
மணம்நிறைந்த பூச்சூடியாள்அவள்
மனம்நிறைந்த காதல்சொன்னாள்

எண்ணிலடங்கா மறுப்புகாரணிகளும்
என்னிலடங்கா கொதிக்கஅக்காதலை
விலக்கிடநிகழும் நல்நடைமுறையை
விளக்கிடஅவளும் தன்தவறுணர்ந்தாள்

இரக்கஉணர்வில் அறமதன்தன்மையும்
இறக்கசெய்வதில் எனக்குமனமில்லை;
கொள்ளிடம்சேர் என்னுள்காதலைக்
கொல்லிடம்எப்படி இருக்கும்?சொல்வீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக