வியாழன், செப்டம்பர் 29, 2016

குறள் எண்: 0424 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0424}

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: நாம் அறிந்தவற்றைப், பிறருக்கு எளிதாய் விளக்குவதும்; பிறர் சொல்வதை,  ஆழமாய் விளங்கிக் கொள்வதுவமே பகுத்தறிவாகும்.
(அது போல்...)
நாம் பெற்றதை, வேண்டுவோர்க்கு மனமுவந்துப் பகிர்வதும்; பிறர் கொடுப்பதில், தேவையானதை மட்டும் ஏற்பதுமே மனிதமாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக