வெள்ளி, செப்டம்பர் 09, 2016

குறள் எண்: 0404 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0404}

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்

விழியப்பன் விளக்கம்: "படிக்காத மேதை" எனப்படும், கற்காதவரின் அறிவு மிக நன்றாக இருப்பினும்; அதைக் கல்விபயின்ற சான்றோர்கள் ஒப்புக்கொள்ள தயங்குவர்.
(அது போல்...)
"இணைந்து வாழ்தல்" முறையில், திருமணமாகாதோரின் இல்வாழ்வு மிக நன்றாக இருப்பினும்; அதைத் திருமணமான பெரியோர்கள் ஏற்க மறுப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக