புதன், செப்டம்பர் 28, 2016

குறள் எண்: 0423 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0423}

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: எவர் எப்படி விவரித்தாலும், எவ்வொரு விளக்கத்தையும்; அவ்விளக்கத்தின் உண்மையானப் பொருளை, உணர்வதே பகுத்தறிவாகும்.
(அது போல்...)
எவர் எப்படி வற்புறுத்தினாலும், எவ்வித மோகத்தையும்; அம்மோகத்தின் ஆழமான விளைவை, ஆராய்வதே சுயமாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக